tamilnadu

img

பாஜக அமைச்சரின் மகனுக்கு ஆயுள் தண்டனை

இடா நகர்:
அருணாச்சலப் பிரதேச மாநிலத் தொழில்துறை அமைச்சராக இருப்பவர், டும்கே தாகரா. பாஜக-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவராவார். இவரின் மகன் காஜூம் பாகாரா (34). இதனிடையே, காஜூம் பாகாரா, கடந்த 2017-ஆம் ஆண்டு,மார்ச் 26-ஆம் தேதி, மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில், கென்ஜம் காம்சி (40) என்பவரை படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். 

பணப்பிரச்சனையொட்டி ஏற்பட்ட தகராறில் காஜூம் பாகாரா இக்கொலையை செய்திருப்பதாக தெரிவித்த போலீசார், அதற்கு ஆதாரமாக ஹோட்டலின் வெளியே நிறுவப்பட்ட சிசிடிவி பதிவுகளையும் சமர்ப்பித்தனர்.இதையடுத்து, வழக்கை விசாரித்து வந்த மேய்கு சியாங் மாவட்ட நீதிமன்றம், இந்திய குற்றவியல் சட்டம் 302 மற்றும் ஆயுதப் பிரிவு சட்டம் 27 (1) ஆகியவற்றின் கீழ்காஜூம் பாகாராவுக்கு, ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கொலை நடந்தபோது, பாஜக தலைவர் டும்கே தாகரா, அருணாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் துணைத்தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.